marutha nilam

vi std social seienceமுல்லை
காடும் அதைச் சார்ந்த பசும் புல் வெளிகளும் ¬ல்லை
நலப்பகுதியாகும்.இங்கு வாழ்ந்த மக்கள் மேய்ச்சல் தொழிலில்
ஈடுபட்டனர். இவர்களை ஆயர் அல்லது கோவலர் என்று
அழைத்தனர். பால், தயிர், öநிய் போன்றவற்றை உற்பத்தி செய்தனர்.
இவர்களது கடவு திருமால் அல்லது மாயோன் ஆகும்.
மருதம்
வளம் மிக்க நலப்பகுதியே மருதம் எனப்பட்டது. இங்கு
வாழ்ந்த பெரும் பகுதி மக்கள் வேளாண்மைத் தொழிலை
மேற்கொண்டதால் வேளாளர்கள் என்று அழைக்கப்பட்டனர். öநில்,
கரும்பு மற்றும் மா, பலா, வாழை போன்ற கனி வகைகளை உற்பத்தி
செய்தனர். நீர்ப்பாசன ¬றைகளைப் பற்றியும் இவர்கள் அறிந்திருந்தனர்.
மழைக்கடவுளான இந்திரன் மருதநல மக்களின் கடவுளாகும்.
நெய்தல்
கடல் சார்ந்த பகுதியே öநிய்தல் நலம் எனப்பட்டது.
இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பμதவர் அல்லது மீனவர்
எனப்பட்டனர். மீன் பிடித்தல் இவர்களின் ¬க்கியத் தொழிலாகும்.
இவர்கள் கடற்பயணங்களிலும் ஈடுபட்டனர். இப்பகுதியில் வாழ்ந்த
உமணர்கள் உப்பை உற்பத்தி செய்து விற்றனர். கடல் தெய்வமான
வருணனை öநிய்தல் நல மக்கள் வழிபட்டனர்.
பாலை
பாலைத் திணை என்பது பாலைவனத்தைக் குறிப்பதாகும்.
ஆனால் தமிழகத்தில் பாலைவனம் இல்லை. எனவே வான்மழை
பொய்த்து வறட்சி ஏற்பட்டால் அப்பகுதியை பாலைத் திணையாகக்
கருதினர். பாலைத் திணையில் வாழ்ந்த மக்களை மறவர் அல்லது
கள்வர் என அழைத்தனர். வீμம் மிக்க இவர்கள் களவுத்
தொழிலையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. பாலைத் திணையில்
காணப்பட்ட வறுமையே இதற்குக் காμணமாகும். இப்பகுதி

மருதம்

vi std social seienceமுல்லை
காடும் அதைச் சார்ந்த பசும் புல் வெளிகளும் ¬ல்லை
நலப்பகுதியாகும்.இங்கு வாழ்ந்த மக்கள் மேய்ச்சல் தொழிலில்
ஈடுபட்டனர். இவர்களை ஆயர் அல்லது கோவலர் என்று
அழைத்தனர். பால், தயிர், öநிய் போன்றவற்றை உற்பத்தி செய்தனர்.
இவர்களது கடவு திருமால் அல்லது மாயோன் ஆகும்.
மருதம்
வளம் மிக்க நலப்பகுதியே மருதம் எனப்பட்டது. இங்கு
வாழ்ந்த பெரும் பகுதி மக்கள் வேளாண்மைத் தொழிலை
மேற்கொண்டதால் வேளாளர்கள் என்று அழைக்கப்பட்டனர். öநில்,
கரும்பு மற்றும் மா, பலா, வாழை போன்ற கனி வகைகளை உற்பத்தி
செய்தனர். நீர்ப்பாசன ¬றைகளைப் பற்றியும் இவர்கள் அறிந்திருந்தனர்.
மழைக்கடவுளான இந்திரன் மருதநல மக்களின் கடவுளாகும்.
நெய்தல்
கடல் சார்ந்த பகுதியே öநிய்தல் நலம் எனப்பட்டது.
இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பμதவர் அல்லது மீனவர்
எனப்பட்டனர். மீன் பிடித்தல் இவர்களின் ¬க்கியத் தொழிலாகும்.
இவர்கள் கடற்பயணங்களிலும் ஈடுபட்டனர். இப்பகுதியில் வாழ்ந்த
உமணர்கள் உப்பை உற்பத்தி செய்து விற்றனர். கடல் தெய்வமான
வருணனை öநிய்தல் நல மக்கள் வழிபட்டனர்.
பாலை
பாலைத் திணை என்பது பாலைவனத்தைக் குறிப்பதாகும்.
ஆனால் தமிழகத்தில் பாலைவனம் இல்லை. எனவே வான்மழை
பொய்த்து வறட்சி ஏற்பட்டால் அப்பகுதியை பாலைத் திணையாகக்
கருதினர். பாலைத் திணையில் வாழ்ந்த மக்களை மறவர் அல்லது
கள்வர் என அழைத்தனர். வீμம் மிக்க இவர்கள் களவுத்
தொழிலையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. பாலைத் திணையில்
காணப்பட்ட வறுமையே இதற்குக் காμணமாகும். இப்பகுதி

குழந்தையின் மூளை தண்டுவடத்தில் காது கேட்கும் கருவி பொருத்தி சாதனை

குழந்தையின் மூளை தண்டுவடத்தில் காது கேட்கும் கருவி பொருத்தி சாதனை
First Published : 12 Feb 2010 01:19:30 AM IST
Last Updated : 12 Feb 2010 07:05:29 AM IST
குழந்தை கௌசிக் காந்தியுடன் டாக்டர் மோகன் காமேஸ்வரன்.
சென்னை,​​ பிப்.​ 11:​ பிறவி காது கேளாமை இருந்த குழந்தைக்கு மூளை தண்டுவடத்தில் நுண்ணிய காது கேட்கும் கருவியைப் பொருத்தி சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனை மறுவாழ்வு அளித்து சாதனை புரிந்துள்ளது.​ ​ இது தொடர்பாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மோகன் காமேஸ்வரன்,​​ பேச்சு-ஒலி பயிற்சி நிபுணர் ரஞ்சித் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:​ ​ பிறந்தது முதல் ஒருவர் இறக்கும் வரை செவித் திறன் பணியை வெளிக்காது,​​ நடுக்காது,​​ உள் காது என மூன்று பாகங்கள் செய்கின்றன.​ இதில் உள்காதில் உள்ள “காக்ளியா’ என்ற பகுதிதான் ஒலியை நரம்பு மூலம் மூளைக்கு கடத்தி காது கேட்பதை உறுதிப்படுத்துகிறது.​ ​ பிறவிக் கோளாறு காரணமாக சில குழந்தைகளுக்கு காக்ளியா பகுதியில் பாதிப்பு இருக்கும்.​ சில குழந்தைகளுக்கு காக்ளியா பகுதியுடன் சேர்த்து நரம்பும் பாதிக்கப்படும்.​ இத்தகைய குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனை அளிக்க ​நவீன காக்ளியர் இம்பிளாண்ட் சிகிச்சை மூலம் செயற்கையாக காக்ளியர் கருவி பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது.​ ​​ ​ சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையில் 1996-ம் ​ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளாண்ட் கருவி பொருத்தப்பட்டு மறுவாழ்வு கிடைத்துள்ளது.​ ​ ஆனால்,​​ குழந்தை கௌஷிக் காந்தி பிறந்தபோது,​​ உள்காதில் உள்ள காக்ளியாவும் இல்லை;​ ஒலியை மூளைக்குக் கடத்தும் நரம்பும் இல்லை.​ காது கேளாமையுடன் ஓர் ஆண்டு 11 மாதங்கள் வளர்ந்தான் கௌஷிக் காந்தி.​ இது மிகவும் அரிய பிரச்னையாகும்.​ ​ ​ இவ்வாறு காக்ளியாவும் மூளைக்கு ஒலியைக் கடத்தும் நரம்பும் இல்லாத நிலையில் மூளையின் அடிப்பகுதியிலேயே “சிப்’ போன்ற காது கேட்கும் கருவியை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தி காது கேட்கும் திறனை ஏற்படுத்த முடியும்.​ ​ பெரியவர்களுக்கு உள்காதில் கட்டி இருந்து அகற்றப்படும் நிலையில் மட்டுமே இவ்வாறு மூளைத் தண்டுவடத்தில் காது கேட்கும் கருவியைப் பொருத்தும் “ஆடிட்டரி பிரெய்ன்ஸ்டெம் இம்பிளாண்ட்’ ​(ஏபிஐ)​ சிகிச்சை செய்யப்படும்.​ ​ ​ தென் கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக குழந்தை கௌசிக் காந்திக்கு “ஏபிஐ’ சிகிச்சை கடந்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.​ மூன்று மாதங்களுக்குப் பிறகு,​​ அதாவது 2009-ம் ஆண்டு ஏப்ரல் முதல் குழந்தை ​கௌசிக் காந்திக்கு பேச்சுப் பயிற்சி கொடுக்கத் தொடங்கி,​​ அம்மா போன்ற வார்த்தைகளை இப்போது கூறத் தொடங்கியுள்ளான்.​ மறுவாழ்வு பெற்றுள்ள குழந்தை கௌசிக் காந்திக்கு வெள்ளிக்கிழமை ​(பிப்ரவரி 12) 3-வது பிறந்த நாள்’ என்றார் டாக்டர் மோகன் காமேஸ்வரன்.

தவறான வைத்தியம்!

தலையங்கம்: தவறான வைத்தியம்!
First Published : 10 Feb 2010 12:00:00 AM IST
Last Updated : 10 Feb 2010 12:03:09 AM IST
மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கும் கிராமப்புற சுகாதார நலன் பட்டயப் படிப்பைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப் போவதில்லை என்கிற தமிழக அரசின் முடிவைப் பாராட்ட வேண்டும்.​ கிராமப்புற மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பட்டப் படிப்பு என்பதை இந்திய மருத்துவக் கழகம் முன்வைத்து அந்தத் திட்டம்தான் கிராமப்புற சுகாதார நலன் பட்டப் படிப்பு என்கிற பெயரில் மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறது.இந்தியாவைப் பொறுத்தவரை நாம் மருத்துவ சேவையில்,​​ குறிப்பாக கிராமப்புற மருத்துவ சேவையில் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.​ ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இந்தியா காலனியாக மாறியபோது நமது பாரம்பரிய சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவமுறைகள் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டு ஆங்கில மருத்துவமுறை மட்டுமே செயல்படும் நிலைமை ஏற்படுத்தப்பட்டது கிராமப்புற மருத்துவ சேவைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு.இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் உரிமம் பெற்ற மருத்துவர்கள் ​(எல்.எம்.பி.)​ என்ற நான்காண்டுப் பட்டயப் படிப்புப் படித்த பல மருத்துவர்கள் இருந்தனர்.​ 1946-ல் அமைக்கப்பட்ட போர் கமிட்டி சிபாரிசின் பேரில் இந்தப் பட்டயப் படிப்பு முறை அகற்றப்பட்டு நவீன மருத்துவப் பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.​ ஐந்தரை ஆண்டு மருத்துவப் பட்டப் படிப்பு ​(எம்.பி.பி.எஸ்.)​ முறை உருவாக்கப்பட்டு நாடு தழுவிய அளவில் மருத்துவ மற்றும் சுகாதார சேவைக்கான அடித்தளம் போடப்பட்டது.போர் கமிட்டியின் பரிந்துரைப்படி மருத்துவப் பட்டப் படிப்புக்கான முறை அமல் செய்யப்பட்டதே தவிர,​​ பெருகி வரும் மக்கள்தொகைக்கேற்ப மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும்,​​ மருத்துவர்களும் அதிகரிக்கவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய ஒன்று.​ நம்மைவிட அதிக மக்கள்தொகை உள்ள சீனா 1960-லேயே விழித்துக் கொண்டு,​​ அதிக அளவில் மருத்துவர்களை உருவாக்கி,​​ கிராமப்புற சேவையைக் கட்டாயமும் ஆக்கி முறையான மருத்துவ சேவையை உருவாக்கியது.​ நாமோ,​​ இப்போதும்கூட 1,722 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில் இருக்கிறோம்.​ கிராமப்புறங்களை மட்டுமாக எடுத்துக் கணக்கிட்டால் இருபதாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமை இருந்தாலும்கூட வியப்பில்லை.இந்த நிலைமையை மாற்ற கிராமப்புற மாணவர்களைக் கிராமங்களில் மட்டும் பணியாற்றப் பட்டயப் படிப்புடனான மருத்துவர்களாக உருவாக்கினால் என்ன என்பதுதான் இந்திய மருத்துவக் கழகம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் திட்டம்.​ அதாவது,​​ கிராமப்புற மக்களுக்கு மருத்துவம் செய்ய மூன்றரை ஆண்டு பட்டயப் படிப்புப் படித்த கிராமப்புற மருத்துவர்கள் போதுமே என்கிற இளக்காரம்.​ இந்த நினைப்பே கிராமப்புற மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாகச் சிந்திக்க முயலும் நகரவாசிகளின் ஆதிக்க மனநிலையை அல்லவா எடுத்துக்காட்டுகிறது!இப்போது இந்தியா முழுவதுமாக இருக்கும் மருத்துவப் பட்டப் படிப்புக்கான மொத்த இடங்கள் சுமார் முப்பதாயிரம் மட்டுமே.​ இவை,​​ இரட்டிப்பாக அதிகரிக்கப்பட வேண்டும்.​ அதை அரசே மருத்துவக் கல்லூரிகளை நிறுவிச் செயல்படுத்த வேண்டும்.இரண்டாவதாக, ​​ இன்றைய மருத்துவ படிப்பை பீடித்திருக்கும் மிகப்பெரிய நோய்,​​ மருத்துவ மேற்படிப்பு மற்றும் சிறப்புத் தகுதி பெறுவதில் இருக்கும் முனைப்பு.​ மருத்துவப் பட்டம் பெற்ற யாரும் படிப்பு முடித்து மருத்துவராகப் பணிபுரியத் தயாராக இல்லை.​ மேற்படிப்புக்கான தகுதித் தேர்வுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வதில்தான் முனைகிறார்களே தவிர,​​ மருத்துவமனைகளில் பணிபுரிய விரும்புவதில்லை.​ ​தகுதித் தேர்வு என்பதை ரத்து செய்துவிட்டு அந்தந்த ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்கிற நிலைமை ஏற்பட்டால் மட்டுமே பொது மருத்துவர்கள் இனிமேல் கிடைப்பார்கள் என்கிற நிலைமை.​ இல்லையென்றால்,​​ ஐந்து ஆண்டு பொது மருத்துவராகப் பணியாற்றினால் மட்டுமே மேற்படிப்புக்குத் தகுதி பெறுவார்கள் என்றும்,​​ அதற்குப் பிறகுதான் தகுதித் தேர்வு எழுத முடியும் என்று மருத்துவக் கழகம் தீர்மானித்துவிட்டால் மிகப்பெரிய மாறுதலை நிச்சயமாக நாம் எதிர்பார்க்க முடியும்.சூப்பர் ஸ்பெஷாலிடி என்கிற சிறப்புத் தகுதியை அனைவரும் பெறுவது என்பதும் அதற்காகத்தான் மருத்துவப் படிப்பு என்றும் ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பதை ஏன் மத்திய அரசும்,​​ மருத்துவக் கழகமும் கண்டும் காணாமலும் செயல்படுகின்றன?​ மருத்துவப் பட்டம் பெற்ற யாராக இருந்தாலும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில்,​​ அதுவும் தாலுகா மருத்துவமனைகளில் பணியாற்றினால் மட்டுமே அவர்களது மருத்துவப் பட்டம் உறுதி செய்யப்படும் என்று அரசு நிபந்தனை விதிக்கத் தயங்குவது ஏன்?மருத்துவர்கள் அதிக அளவில் தேவைதான்.​ ஆனால் அவர்கள் சேவை மனப்பான்மை உடைய மனிதநேயம் கொண்ட மருத்துவர்களாக இருக்க வேண்டுமே தவிர பணப்பிசாசுகளாக,​​ ஆடம்பர வாழ்க்கைப் பிரியர்களாக இருந்தால்,​​ அப்படி ஒரு மருத்துவ சேவை தேவைதானா?கிராமப்புற மருத்துவ சேவைக்கு மூன்றரை ஆண்டு மருத்துவப் பட்டப் படிப்பைத் தொடங்குகிறோம் என்பது நோயைவிட மோசமான தீர்வாக அமையும்.​ சத்தீஸ்கர் மாநிலத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு இதுபோன்று ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியடைந்ததை நாம் மறந்துவிடக் கூடாது.​ இதைத் தமிழக அரசு முன்னெச்சரிக்கையுடன் உணர்ந்து இந்திய மருத்துவக் கழகம் மற்றும் மத்திய அரசின் யோசனையை நிராகரித்திருப்பதை வரவேற்கும் அதேவேளையில்,​​ தமிழகத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய குறைபாட்டையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை சுமார் 13,000.​ இவர்களில் 75 சதவிகிதம் நகரங்களில்தான் மருத்துவம் பார்க்கிறார்கள்.​ தனியார் மருத்துவர்கள் சுமார் 45,000.​ இவர்களில் 60 சதவிகிதம் நகரங்களில்தான் மருத்துவம் பார்க்கிறார்கள்.​ இந்த நிலைமை தலைகீழாக மாற்றப்பட வேண்டும்.​ அதற்கு எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரி நிறுவுவதுதான் தீர்வாக இருக்க முடியும்.

தமிழி எழுத்துமுறை

ந்து எழுத்து முறையில் இருந்து வந்ததே தமிழி முறை: ஆய்வாளர்

பிப்ரவரி 09,2010,00:00  IST

Top  City news update

//
//

சென்னை: “தென்னிந்திய மக்களுக்கு சிந்து எழுத்து முறை தெரிந்திருந்தது என்பது உறுதி. ஆகவே தமிழி எழுத்துமுறை சிந்து எழுத்து முறையிலிருந்து வந்து தான் உருவாகி இருக்கும்,” என்று சிந்து எழுத்து ஆய்வாளர் பூரணசந்திரஜீவா கூறினார். சென்னையில் தமிழ் வளர்ச்சி வளாகத்தில் தொல்லியல் துறை கருத்தரங்கு நடந்தது. இதைத் தொல்லி-யல்துறை முதன்மை செய-லர் ஸ்ரீதர் துவக்கி வைத்து பேசியதாவது: நமது எழுத்து வளர்ச்சி எங்கு துவங்கியது என்ற கேள்வி உள்ளது. சிந்து எழுத்திலிருந்து வந்ததா அல்லது இந்த சிந்து எழுத்து இடையில் வந்ததா என்ற கேள்வியும் உள்ளது.
மயிலாடுதுறைக்கு அருகில் செம்பியன் கண்டியூரில் கிடைத்த கல்வெட்டில் நான்கு குறியீடுகள் கிடைத்தன. சிந்து எழுத்து குறியீடுகள் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
குறியீடுகளை வைத்து காலத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்றாலும், எதை உணர்த்துகிறது என்று தெளிவாக தெரியவில்லை. சிந்து எழுத்து ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஸ்ரீதர் பேசி-னார்.
நிகழ்ச்சியில், “சிந்து எழுத்தும் தமிழியும் ஓர் ஒப்பாய்வு’ என்ற தலைப்பில், சிந்து எழுத்து ஆய்வாளர் பூரணசந்திர ஜீவா பேசியதாவது: சிந்து எழுத்து முறை, படங்களை அடிப்படையாக கொண்டது என்கின்றனர். இது முழுவதும் படங்களால் ஆன எழுத்துக்கள் அல்ல. முழுமையாக எல்லா எழுத்தும் செயற்கை வடிவங்களால் ஆனது. செயற்கை வடிவம் மட்டுமல்லாமல், வடிவியல் கணித அடிப்படையில் வடிவங்களாக சிந்து எழுத்துக்கள் உள்ளன. இதற்கு காரணம் சிந்துவெளி மக்கள், நகர அமைப் புகளை வடிவமைக்கும் கட்ட-டக் கலையில் மிகச் சிறந்த அறிவு பெற்றிருந்தனர். இந்த அறிவை பயன்படுத்தி எழுத்துகளுக்கு செயற்கையான வடிவங்களை அமைத்தனர். எனவே, இந்த வடிவங்களுக்கு கொடுத்த பொருள் பொருந்தாமல் போய் விட்டது.
இந்த சிந்து எழுத்து வடிவங்கள் தமிழி என்ற எழுத்து வடிவங்களுடன் பொருந்துகின்றன. இரண்டையும் ஒப்பிட்டு சிந்து எழுத்தை படிக்க முயற்சிக்கலாம் என்பது உறுதி. தமிழகத்தில் சிந்து எழுத்து வடிவங்கள் பெருமுக்கல், கீழ்வாலை, பொதிகைமலை குகை, இலங்கையில் யாழ்பாணத்தில் ஆணைக்கொட்டடி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. தென்னிந்திய மக்களுக்கு சிந்து எழுத்து முறை தெரிந்திருந்தது என்பது உறுதி. ஆகவே தமிழி எழுத்து, முறை சிந்து எழுத்து முறையிலிருந்து வந்துதான் உருவாகி இருக்கும் என்பது உறுதி. இவ்வாறு பூரணசந்திர ஜீவா பேசினார்.

பெண் டிரை​வர்

Last Updated :

போதிய படிப்பு இல்லை,​​ நாமெல்​லாம் வேலைக்​குப் போக​மு​டி​யாது என்று டி.வி.​ சீரி​யல் பார்ப்​ப​தையே பெரும் பணி​யாக்​கிக் கொள்​கி​றார்​கள் பெரும்​பான்​மை​யான பெண்​கள்.​ அவர்​கள் மத்​தி​யில் குடும்​பக்​க​ட​னைத் தீர்க்க லாரி ஓட்டி வரு​கி​றார்  செல்​வ​மணி.​ ​சேலம் மாவட்​டம் சங்​கிரி பன்​னங்​காடு கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் கோபால்.​ லாரி டிரை​வர்.​ இவ​ரது மனைவி செல்​வ​மணி.​ இவ​ருக்கு அருள்​மு​ரு​கன்,​​ மோகன்​பி​ரபு என்ற இரு​ம​கன்​கள் உள்​ள​னர்.​ லாரி ஓட்​டும் தொழி​லில் ​ போதிய வரு​மா​னம் இல்​லா​த​தால் கண​வ​ருக்​குத் துணை​யாக லாரி​யில் கிளீ​ன​ரா​கச் சேர்ந்​தார் செல்​வ​மணி.​ லாரி​யைப் பழு​து​பார்த்​தல்,​​ பஞ்​ச​ரா​னால் டயரை மாற்​று​வது,​​ தார்ப்​பாய் மடித்து வைப்​பது,​​ லாரியை சுத்​தம் செய்​வது போன்ற வேலை​களை செய்​தார்.​ ​பின்​னர் லாரி ஓட்​டப் பயிற்சி பெற்ற இவர்,​​ கடந்த 2004-ம் ஆண்டு ஓட்​டு​நர் உரி​மம் பெற்​றார்.​லாரி ஓட்​டு​நர் ஆனார்.​ இவ​ரு​டைய லாரி சவாரி தமிழ்​நாட்​டில் மட்​டு​மல்ல,​​ பிற மாநி​லங்​க​ளி​லும் துணிச்​ச​லா​கத் தொடர்​வ​து​தான் ஆச்​சர்​யம்.​ கடந்த 6 ஆண்​டு​க​ளாக தமி​ழ​கம்,​கேர​ளம்,​​ கர்​நா​ட​கம்,​​ ஒரிசா,​​ மகா​ராஷ்​டிரா,​​ பீகார்,​குஜ​ராத்,​​ மத்​தி​ய​பி​ர​தே​சம் ஆகிய பகு​தி​க​ளில் லாரி ஓட்டி வரு​கி​றார்.​ இவர் ஓட்​டு​வது 8 சக்​க​ரங்​களை கொண்ட பெரிய டிரக்.​ சமீ​பத்​தில் சத்​தி​ய​மங்​க​லத்​தில் உள்ள தனி​யார் நூற்​பா​லைக்கு மகா​ராஷ்​டி​ரா​வில் இருந்து 18 டன் எடை​யுள்ள பஞ்சு பேல்​களை ஏற்றி வந்​தார்.​ லாரியை பெண் டிரை​வர் இயக்​கி​யதை ஆண் தொழி​லா​ளர்​க​ளும் வியப்​பு​டன் பார்த்​த​னர்.​இது குறித்து செல்​வ​மணி,​​ “”உற​வி​னர் ஒரு​வ​ருக்கு எனது ஜாமி​னில் ரூ.3 லட்​சம் கடன் வாங்கி கொடுத்​தேன்.​ உற​வி​னர் கடனை திருப்பி செலுத்​தாத கார​ணத்​தி​னால் ஜாமீன் கையெ​ழுத்​திட்ட நான் திருப்பி செலுத்த வேண்​டிய சூழ​லில் லாரி டிரை​வர் வேலை ​ பார்க்​கும் கண​வ​ருக்கு கிளீ​ன​ராக சென்​றேன்.​ லாரி​யி​லேயே கண​வ​ருக்கு சமை​யல் செய்து கொடுத்​தல்,​​ லாரி​யில் உள்ள அனைத்து வேலை​க​ளும் செய்து லாரி ஓட்ட கற்​று​கொண்டு ஓட்​டு​நர் உரி​ம​மும் பெற்​றேன்.​ வட​மா​நி​லங்​க​ளில் சரக்கு லோடு ஏற்றி குறிப்​பிட்ட நேரத்​தில் தமி​ழ​கத்​தில் இறக்​கி​வி​ட​வேண்​டும் என்​ப​தால் எனது கண​வ​ரு​டன் சேர்ந்து விடிய,​விடிய லாரி ஓட்​டி​வ​ரு​கி​றேன்.தொழிலில் ஆண் பெண் என்ற வேறு​பாடு இருக்​கக்​கூ​டாது என நினைத்து கடந்த 6 ஆண்​டு​க​ளாக இரவு முழு​வ​தும் கண்​வி​ழித்து விபத்​தின்றி ஓட்டி வரு​கி​றேன்.​ ஆண்​கள் டிரை​வ​ராக செல்​லும் போது செக் போஸ்ட்,​போலீஸ் மாமூல்,​​ செக்​கிங் போன்ற செல​வு​கள் ஏற்​ப​டும்.​ பெண் டிரை​வர் என்​ப​தால் தமிழ்நாட்டிலிருந்து மகா​ராஷ்​டி​ரம் வரை ஒரு ரூபாய் கூட லஞ்​சம் வாங்​க​வில்லை” என்​றார்.

நாடாளுமன்றத்தின் மொழிப் பிரச்னை

dee

நாடாளுமன்றத்தின் மொழிப் பிரச்னை
First Published : 09 Feb 2010 12:00:00 AM IST
Last Updated :
உலகில் எந்த நாட்டிலும் உள்ள மக்களுக்கும் தம்முடைய விருப்பங்களையும் கருத்துகளையும் எளிதாக உணர்வுடன் வெளியிட அவர்களின் தாய்மொழிதான் முதன்மையான சாதனமாகும்.​ அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்களுக்குத் தனிப்பட்ட முறையில் வளமையும் தொன்மையும் மிக்க தாய்த்தமிழைப் போற்றிடும் ஆர்வமும் பண்பாடும் ஆழ்ந்து ​ அமைந்துள்ளன.​ ​ ​ ​ ​தமிழர்களின் தாய்மொழிப் பற்று இலக்கிய அளவுடன்,​​ வரலாற்று நாகரிகப் பெருமையுடன் நிற்கவில்லை.​ 1937-ல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ராஜாஜியால் பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயமாகப் புகுத்தப்பட்டபொழுது,​​ தாய்த்தமிழைக் காத்திட தமிழர்களின் போராட்டம் நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றது.​ ராஜாஜி அமைச்சரவை நீங்கியதும்,​​ 1939-ல் கட்டாய இந்தி கைவிடப்பட்டது.ஆயினும்,​​ அதற்குப் பின்னரும் தமிழகத்தின் மொழிப் போராட்டம் விரிவடைந்து தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் பரவியது.​ 1950-ல் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாகும் என்பதற்கான கோரிக்கை அரசியல் நிர்ணய சபையில் இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பை உண்டாக்கியது.​ இறுதியில்,​​ இந்தி,​​ ஆங்கிலம் இரண்டும் ஆட்சி மொழிகளாக ஏற்கப்பட்டு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முடிவெடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.​ ​பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்,​​ 1965 ஜனவரி 26 முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்று மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா அறிவித்ததும்,​​ தமிழக மக்களின் மொழிப் போராட்டம் உச்ச நிலையை அடைந்தது.​ தென் மாநிலங்களுக்கும் அப்பால்,​​ மேற்கு வங்காளம்,​​ வடமேற்கு மாநிலங்கள்,​​ பஞ்சாப்,​​ காஷ்மீர் ஆகிய பல்வேறு திசைகளிலும் அது பரவியது.​ 1937-ல் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முனைந்த ராஜாஜியே ​ 1965-ல் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை ஆட்சி மொழியாக்கினால் இந்திய ஒற்றுமை சிதறுண்டுபோகும் என்று எச்சரித்தார்.​ ​1957-ல் அறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாகப் பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற மக்களவைக்கு இரு உறுப்பினர்களும்,​​ மாநிலச் சட்டசபைக்கு 15 உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர்.​ 1962 தேர்தலுக்குப் பிறகு சட்டசபையில் 50 உறுப்பினர்களும்,​​ நாடாளுமன்றத்தில் 8 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.​ அப்பொழுது அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக ஆனார்.​ 1967-ல் அண்ணா முதலமைச்சராகும் வகையில் கழகத்துக்குப் பெரும் வெற்றி கிடைத்தது.​ ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அண்ணா தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்,​​ ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே ஆட்சி மொழிகளாக இருக்கும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.​ ​நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 120-ம் பிரிவு கூறுகிறது.​ அத்துடன்,​​ இந்தி அல்லது ஆங்கிலத்தில் போதுமான அளவில் நன்கு பேச முடியாத உறுப்பினர்கள் அவைத்தலைவரின் அனுமதி பெற்றுத் தம் தாய்மொழியில் பேசலாம் என்று அந்தப் பிரிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.இந்தப் பிரிவின்படி இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் தெளிவாகப் பேச முடியாதவர்கள் மட்டுமே அவைத் தலைவரின் அனுமதியுடன் தம் தாய்மொழியில் பேசலாம் என்பதை மாற்றி,​​ அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள தேசிய மொழிகளில் ஒன்றில் பேச உறுப்பினர்களுக்கு அடிப்படை உரிமை இருக்க வேண்டும் என்றும், அதற்கான வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் ஒரு மசோதா​ மூலம் நான் வலி​யுறுத்தினேன்.​ ​அப்பொழுது அவையில் வீற்றிருந்த துணைத் தலைவர் ஆர்.கே.​ கடில்கர் என்னுடைய பேச்சின் தொடக்கத்திலேயே குறுக்கிட்டு,​​ அவைத் தலைவர்களாகிய நாங்கள் இப்பொழுது உறுப்பினர்கள் தம் மொழியில் பேச வாய்ப்புத் தருகிறோமே,​​ எதற்கு இந்த மசோதா என்றார்.​ ​ ​அதற்கு நான் அளித்த பதில்:​ இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேச முடியாதவர்கள் மட்டுமே தாய்மொழியில் பேசலாம் என்றும்,​​ அதற்கும்,​​ அவைத் தலைவரின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் இப்பொழுது 120-வது பிரிவில் ஒரு கட்டாயம் இருக்கிறது.​ இதை மாற்ற வேண்டும்.​ இந்தியிலும்,​​ ஆங்கிலத்திலும் பேச முடியும் என்றாலும்,​​ தம் தாய்மொழியில் பேசும் அடிப்படை உரிமை எங்களுக்கும் வேண்டும்.​ அதற்கு யாருடைய அனுமதியும் எங்களுக்குத் தேவை என்று இருக்கக் கூடாது.​ ​மேலும் சில ஆதாரங்களை நான் முன்வைத்தேன்:​ இந்தியாவில் பதினைந்து தேசிய மொழிகள் உள்ளன.​ அவை ஒவ்வொன்றுக்கும் வாய்ப்பளிக்க இயலாது என்று சிலர் கூறலாம்.​ சோவியத் கூட்டமைப்பில் இருக்கும் உயர்மட்ட சட்டசபையில் பதின்மூன்று மொழியினர் தம் மொழியில் பேசுவதற்கும்,​​ அவை உடனடியாக மற்றவர்களுக்கு மொழிபெயர்த்துத் தருவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.​ சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் ​(முதலிடம்),​​ மலாய்,​​ சீனம்,​​ தமிழ் ஆகிய நான்கு மொழிகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.​ பதினோரு லட்சம் மக்களையுடைய சுவிட்சர்லாந்தில் ஜெர்மன்,​​ பிரெஞ்சு,​​ இத்தாலி,​​ ரொமான்ஷ் ஆகிய நான்கும் தேசிய ஆட்சிமொழிகளாக இருக்கின்றன.​ சின்னஞ்சிறு நாடுகளில்கூட நான்கு மொழிகளுக்குத் தரப்படுகிற உரிமை,​​ ஒரு துணைக் கண்டமாக ஐம்பது கோடி மக்களையுடைய இந்தியாவில் பதினான்கு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு வசதிகளைத் தர ஏன் முடியாது?​ ​ ​என்று கேட்டேன். அன்றைய தினம் நேரம் போதாமல் என் பேச்சுடன் விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.​ ​இரண்டு வாரங்கள் கழித்து என் மசோதாவை ஆதரித்து 16 உறுப்பினர்கள் பேசினர்.​ காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷியோ நாராயண் ஒருவர் மட்டும்தான் எனது மசோதாவுக்கு எதிராகப் பேசினார்.​ ​விவாதத்துக்குப் பதிலளித்த உள்துறை இணையமைச்சர் வி.சி.சுக்லா இந்த மசோதாவின் உணர்வை நாங்கள் வரவேற்றாலும்,​​ அதனையொட்டி பதினைந்து மொழிகளையும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தத் தயங்க மாட்டோம் என்றாலும், ஒரு முக்கியமான பிரச்னை இப்பொழுது ஆட்சி மொழிகளாக இரு மொழிகள் இருக்கின்றன என்றாலும்,​​ கடைசியில் ஒரு மொழி மட்டுமே ஆட்சி மொழியாக நிலைபெறும் என்ற சூழ்நிலையில் பதினைந்து ஆட்சி மொழிகளாகச் சேர்க்கப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றார்.விவாதத்தின் முடிவுரையில் நான் முதலில் சிறிது நேரம் தமிழில் பேசிவிட்டு,​​ பிறகு ஆங்கிலத்தில் மசோதாவுக்கு ஆதரவு தந்த உறுப்பினர்களுக்கும்,​​ மற்ற தலைவர்களுக்கும்,​​ உறுப்பினர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன்,​​ என்னுடைய மசோதாவின் முக்கிய நோக்கம் 1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தி பேசாத பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெருவாரியாக இந்த அவைக்கு வந்துள்ளார்கள்.​ அவர்களுக்கும் பேசுவதற்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்தால்தான் ஜனநாயக முறையில் மக்கள் விருப்பு,​​ வெறுப்புகளுக்கு மதிப்பளிப்பதாக ஆகும் என்று வலியுறுத்தினேன்.கடைசியில், ​​ வாக்கெடுப்பில் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.​ அது காங்கிரஸ் பெரும்பான்மை பலமுடைய அரசாங்கத்தின் போக்கு என்பது முன்கூட்டியே எங்களுக்குத் தெரிந்த ஒன்றாகும்.1968-ல் நான் கொடுத்த மசோதா நிறைவேறியிருந்தால் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் இந்தி,​​ ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஏனைய தேசிய மொழிகளிலும் உறுப்பினர்கள் பேசுவதற்கான உரிமை சட்டப்படி கிடைத்திருக்கும்.​ ஆனால்,​​ அப்பொழுது 520 உறுப்பினர்களையுடைய மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 283 உறுப்பினர்களைக்கொண்ட பெரும்பான்மை பலம் இருந்ததால் எதைப்பற்றியும் கவலைப்படாமல்,​​ இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழியாக நிலைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வரவேற்கத்தக்க உணர்வுடைய என் மசோதாவை அப்பொழுது காங்கிரஸ் ஆட்சி தோற்கடித்துவிட்டது.​ இப்பொழுது நிலைமை மாறி இருக்கிறது.​ மத்தியிலும்,​​ மாநிலங்கள் பலவற்றிலும் காங்கிரஸ் கட்சி காலப்போக்கில் பலவீனமடைந்து 2009 தேர்தலுக்குப் பிறகு 545 உறுப்பினர்களைக்கொண்ட மக்களவையில் 206 இடங்களை மட்டுமே பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மற்றும் பல கட்சிகளின்பெரும்பாலான மாநிலக் கட்சிகளின்ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது.​ 1968-ல் காங்கிரஸ் கட்சி காட்டிய ஆணவப்போக்கு இப்பொழுது செல்லுபடியாகாது.​ ​ ​120-வது பிரிவை மாற்றியமைக்க முன்பு நான் எடுத்த முயற்சி பற்றி இங்கு ​ கூறுவதற்குக் காரணம்,​​ இப்பொழுது நாடாளுமன்றத்தில் தாய்மொழியில் பேச உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவதைப்போல,​​ அமைச்சர்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ரசாயன உரத்துறை அமைச்சர் மு.க.​ அழகிரி எழுப்பியுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.​ அமைச்சரும் ஓர் உறுப்பினர் என்ற அடிப்படையில் இது பற்றி அவைத் தலைவர் எத்தகைய முடிவை எடுத்திருக்கிறார் என்பது தெரியவில்லை.​ நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர்​ வரு​கிற 22-2-2010 அன்று தொடங்​கு​கி​றது.​ அதற்கு முன்னதாக,​​ இந்த மொழிப் பிரச்னை பற்றி அவைத் தலைவரின் முடிவு வெளியானால் நல்லது.​ ​ ​ ​நாடாளுமன்றத்தில் இப்பொழுதுள்ள கட்சிகளின் பலத்தைக் கணக்கிட்டால்,​​ தேசிய மொழிகள் அனைத்தும் ஆங்கிலத்துடன் இணைந்து நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்குப் பயன்படும் விதத்தில் அமைய திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட்ட மற்ற கட்சிகள் அனைத்தும் முயற்சி செய்தால் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற முடியும்.

makkal arasin liilaigal

தலையங்கம்: அரசாங்க மோசடி!
First Published : 09 Feb 2010 12:00:00 AM IST
Last Updated :
தொன்றுதொட்டு ஓர் அரசின் அடிப்படைக் கடமை என்று கருதப்படுபவை,​​ தேசத்தின் பாதுகாப்பு,​​ சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது,​​ சாலைகள் அமைத்தல்,​​ சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவைதான்.​ கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அரசு பொருளாதார தாராளமயமாக்கல் என்கிற கொள்கையை ஏற்றுக்கொண்டது முதல் இந்த அடிப்படைக் கடமையைக்கூடத் தனியாருக்குத் தாரை வார்த்துவிடத் தொடங்கி இருக்கிறது என்பதுதான் வேதனைக்குரியது.சாலைகளை அமைப்பது என்பது நிச்சயமாக வளர்ச்சியின் அறிகுறி என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.​ தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத் துறை முன்வைத்த தங்க நாற்கரச் சாலைத் திட்டம் என்பது சுதந்திர இந்திய சரித்திரத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு.நெடுஞ்சாலைகள் ஒருபுறம் வளர்ச்சியின் அடையாளங்களாகத் தென்பட்டாலும் இன்னொருபுறத்தில் பல்லாயிரம் ஏக்கர் விவசாய சாகுபடி நிலங்களைக் கபளீகரம் செய்பவை.​ கார் மற்றும் கனரக லாரி உற்பத்தி நிறுவனங்களுக்கும்,​​ ஏற்றுமதியாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வரப்பிரசாதமாக இந்த நெடுஞ்சாலைகள் ஒருபுறம் அமைவதும்,​​ மறுபுறம் லட்சக்கணக்கான சிறு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவில் நிற்பதும் ஒரே நாணயத்தின் இருவேறு முகங்கள்.சாலைகள் உலகத் தரத்தில் இருக்கின்றன,​​ நாங்கள் விரைவாகச் செல்ல முடிகிறது என்று காரிலும் பஸ்ஸிலும் பயணிப்பவர்கள் மகிழ்ச்சி அடையும் அதேவேளையில்,​​ இந்த ​ மலைப்பைப் பயன்படுத்தி மிகப்பெரிய வசூல் மோசடி நடைபெறுவது அவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.​ “கண்கட்டு வித்தை’ என்பார்களே அதை நிஜமாகவே நடத்திக் காட்டுவது தனிநபர்கூட அல்ல,​​ இந்திய அரசு.​ சுரண்டப்படுவது வேறு யாரோ அல்ல,​​ அந்த இந்திய அரசுக்கு ஆதாரமாக இருக்கும் இந்தியக் குடிமகன்.விற்பனை வரி,​​ வருமான வரி,​​ சுங்க வரி,​​ சேவை வரி,​​ கலால் வரி என்று எதிலெல்லாம் வரி வசூலிக்க முடியுமோ அதிலெல்லாம் அரசாங்கம் வரி விதித்துத் தனது வருவாயைப் பெருக்கிக் கொள்வது எதற்காக?​ மக்களின் வசதிக்காக சாலைகள் அமைக்கவும்,​​ கல்விச் சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் அமைக்கவும்தானே வரிப்பணமே வசூலிக்கப்படுகிறது.​ பிறகு,​​ நாங்கள் உலகத் தரத்தில் சாலைகள் அமைக்கிறோம் என்கிற பெயரில் சாலையில் பயணிக்க ஆங்காங்கே சுங்கம் வசூலிப்பது என்ன நியாயம்?​ புதிதாக மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு தீர்மானம் எடுக்க இருக்கிறது.​ அதன்படி ஒப்பிட்டு 60 கி.மீ.​ தூரத்துக்கு ஒரு சுங்கச்சாவடி அமைத்துக் கட்டணம் வசூலிக்க இருக்கிறது.​ 1997-ல் இதேபோல தேசிய நெடுஞ்சாலை ​(கட்டண விதிப்பு மற்றும் வசூல்)​ விதி கொண்டு வரப்பட்டபோது,​​ பொதுநல அமைப்புகளின் எதிர்ப்புக்கு இணங்கி கிலோமீட்டருக்கு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் செலவானால் மட்டுமே சுங்கம் வசூலிக்கப்படும் என்கிற நிபந்தனையை அரசு ஏற்றது.​ இப்போது அந்த நிபந்தனையை ஒரு கோடி ரூபாயாக அரசு குறைக்க இருக்கிறது.​ அதாவது இனிமேல் எந்த தேசிய நெடுஞ்சாலையில் நாம் பயணித்தாலும் 60 கி.மீ.​ தூரத்துக்கு ஒருமுறை சுங்கம் வசூலிக்கப்படும்.உலகத் தரமான சாலையை உபயோகிக்கும்போது அதற்கான கட்டணத்தை வசூலிப்பதில் என்ன தவறு என்று கேட்கலாம்.​ சேவைக்குக் கட்டணம் வசூலித்தால் என்ன தவறு என்று கேட்பவர்கள் இனிமேல் அமைச்சர்கள்,​​ அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மக்களுக்குச் செய்யும் சேவைக்குப் பிரதிபலனாக அன்பளிப்பும் லஞ்சமும் பெறுவதுகூடத் தவறில்லை என்று கூறுவார்களோ என்னவோ?இரண்டு பாதைகள் இருந்து,​​ உலகத் தரமான கட்டணச் சாலை இருந்தால்கூடத் தவறில்லை.​ இருப்பது ஒரே சாலை,​​ அதுவும் கட்டணச் சாலை மட்டுமே என்றால் அது என்ன நியாயம்?​ சாலை போட என்ன செலவானது,​​ அன்றாடம் எவ்வளவு வசூலானது,​​ இந்தச் சுங்கம் எப்போது நிறுத்தப்படும் என்கிற வரைமுறை உண்டா என்றால் அதுவும் கிடையாது.​ சென்னையில் வசிப்பவர்கள் சுங்கம் செலுத்தாமல் மகாபலிபுரத்துக்கு வாடகைக் காரில் பயணிக்க முடியாது என்பது தெரியுமா?இந்த நெடுஞ்சாலைகள் அமைக்க நமது அரசு வெளிநாடுகளிலிருந்தோ தனியாரிடமிருந்தோ கடன் வாங்குகிறதா என்றால் இல்லை.​ நமது வரிப்பணத்தில்தான் நெடுஞ்சாலைகள் போடப்படுகின்றன.​ இந்திய அரசின் அன்னியச் செலாவணி இருப்பு 235 பில்லியன் டாலர்கள்.​ நமது தேசிய சேமிப்பு விகிதம் 35 சதவிகிதம்.​ இந்த அரசாங்க மோசடியை எதிர்த்துக் குரல் எழுப்ப ஏன் யாரும் முன்வரவில்லை?

mathu.

மது விற்பனை இருக்கும்வரை தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முடியாது: தமிழருவி மணியன்

veerar suntharalingam

மாவீரர் சுந்தரலிங்கத் தேவந்திரர்!

தமிழர் வரலாறு பற்பல ரூபங்கள் காட்டும் மாயக்கண்ணாடியாக இருக்கிறது. ஓர் உண்மையின் மேல் விழுந்து பல பொய்கள் மறைகின்றன. ஆதாரங்கள், தகவல்கள் கிடைக்காமை காரணமாக வரலாறு புலப்படவில்லை என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கிடைத்திருக்கிற வரலாறுகூட சாதிக்கழிப்புகள், சாதி மேலாண்மை காரணமாக அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போகும் நிலைமை இன்றும் நீடிக்கிற அவலமாகத் தொடர்கிறது. ஆங்கிலேயக் கும்பனி ஆட்சியைந் எதிர்த்த தொடக்க காலப் போராட்ட வரலாற்றில் மேலெழுந்து வருகிற சில தலைவர்கள் புலித் தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்றவர்களுடன் அவர்க-ளுக்கு நிகராகத் தகத்தகாயத் தியாகங்கள் செய்து தம் உயிரையும் ஈந்து, போதிய வெளிச்சமற்றுப்போன மாபெரும் தியாக வீரர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

அவர்களில் முதலில் வருகிறவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கரின் தளபதியாக வாழ்ந்தவர் அவர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையமும் கட்டபொம்முவும் கும்பனி ராணுவத்தால் அழித்தொழிக்கப்படுவதற்கு முன்னால், அவர்களைக் காத்து அம் முயற்சியில் தம் உயிரைத் தந்தவர் சுந்தரலிங்கம். ஆதிக்க ஆங்கிலேயரை எதிர்த்து முதல் சுதந்திரப் போராட்ட முயற்சிகள், எழுச்சிகளாகவும், புரட்சியாகவும் முளைத்தது தமிழகத்தில்தான் என்பேதே உண்மையான வரலாறு.

‘சிப்பாய் புரட்சி’ என்று சொல்லப்பட்ட, இந்தியாவின் வட மாநிலங்களில் நிகழ்ந்த 1857 போரே , இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று வரலாறு தெரியாதவர்கள் (சாவர்க்கர் எழுதியதையும் சேர்த்தே சொல்கிறேன்) எழுதிய தவறுகளுக்கு மாறாக, பிரிட்டிஷ் கும்பனியை எதிர்த்த ஆதிப் போராட்டங்கள், போர்கள் தமிழ் மண்ணிலேயே நடந்துள்ளன. இந்தியாவின் ஆதிச் சுதந்திரப் போராளிகளில் ஒருவரே சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள சுவர்னகிரியில் பிறந்தவர் சுந்தரலிங்கம். தந்தை கட்டக் கருப்பணத் தேவேந்திரர். தாயார் முத்தம்மாள். சுந்தரலிங்கம் பிறந்த ஆண்டு ஏறக்குறைய 1771 என்று நம்பப்படுகிறது. மனைவி சண்முகவடிவு. தம்பதிகளுக்கு இரு மகன்கள் உண்டு. ஒரு ‘நதி நீர்ப் பங்கீட்டில்’தான் சுந்தரலிங்கத்தின் அரசியல் வரலாறு தொடங்கி இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சிக்குச் சொந்தமான ஆற்றிலோடைக் கண்மாய் நீரை எட்டயபுரத்தைச் சேர்ந்த தருவைக்குளம் கண்மாய்க்குத் திருப்ப எட்டயபுரத்து அதிகாரம் ஆற்றிலோடைக் கண்மாயின் குறுக்கே கரை எழுப்பியபோது, அதைத் தடுத்து எட்டயபுரத்தார்களை விரட்டியடித்த வீரச் செயலால் புகழடைந்தார் சுந்தரலிங்கம். பாஞ்சாலங்குறிச்சிக்கு அவர் செய்த முதல் தொண்டு அது. இதைத் தொடர்ந்து, சுந்தரலிங்கம், கட்டபொம்முவின் படைப்பிரிவில் முக்கியப் பொறுப்பில் சேர்க்கப்பட்டுத் தன் அர்ப்பணிப்பு மிக்க வீரச் செயல்களால் தளபதி என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

மதுரையை மையமாகக் கொண்டு விசாலமான தமிழ்நாடு-திருவிதாங்கூர் உள்ளிட்ட பூமியை ஆண்ட விசுவநாத நாயக்கன் (1529-1564) நிர்வாக வசதிக்காக, தமிழ்நாட்டு நிலப்பரப்பை 72 பாளையங்களாகப் பிரித்தார். அதில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி பாளையம். இப்பாளையம் கட்டபொம்முவின், ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு தோக்குலவார் பிரிவு, முன்னோர்களுக்குத் தரப்பட்டது. அந்த வழியில் வீரபாண்டிய கட்டபொம்மன் வருகிறார். இவர் காலத்தில் நிலவரி, வசூலிக்கும் பொறுப்பு ஆங்கிலக் கும்பனிக்கு வந்து சேர்ந்தது. பெரும்பாலான பாளையங்கள் ஒழுங்காகக் கப்பம் கட்டித் தம் விசுவாசத்தைக் கும்பனிக்குக் காட்டிய காலத்தில், கட்டபொம்மு கப்பப் பணம் தர மறுத்தார். மறுத்தமைக்கான காரணங்கள், ஆங்கிலேயரின் அணுகுமுறை. வரம்பு மீறிய அதிகாரக் கொடுங்கோல் முறையில் சுதேச மன்னர்கள் என்று மக்களால் கருதப்பட்ட பாளையக்காரர்கள் மேல் ஆங்கிலேயர் செலுத்திய அவமரியாதைப் போக்குகள். இரண்டாவது காரணம், ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து அரும்பிக் கொண்டிருந்த சுதந்திர உணர்வு.

கும்பனிக்கு 1972 முதலே ஆறு ஆண்டுகளாகக் கட்டபொம்மு வரிகட்ட மறுத்துக் கொண்டிருந்தார். இந்தச் சூழலில் திருநெல்வேலி, இராமநாதபுரத்தின் ஆட்சியராக 1797-ல் நியமிக்கப்பட்ட ஜாக்சன், 26.10.1797 அன்று,‘உடனடியாக வரி செலுத்த வேண்டும் என்றும், தூத்துக்குடியில் முகாம் இட்டிருந்த இராணுவ அதிகாரி டேவிட்சனுக்கு உணவுக்காக ஆடுகள் அனுப்ப வேண்டும்’ என்றும் கட்டபொம்மனுக்குத் தாக்கீது பிறப்பித்தான். கட்டபொம்மன், இதைப் புறக்கணித்தான். அடுத்து ஜாக்சன் எழுதிய, ‘பாளையம் பறிமுதல் செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்த இரண்டு கடிதத்தையும் கட்டபொம்மு கசக்கித் தூர எறிந்தான். இந்தக் காலத்தில், கும்பனிக்கு எதிராக இதர பாளையக்காரர் மனதில் சுதந்திர வேட்கை உருவாகிக் கொண்டிருந்தது. இறுதியில் கட்டபொம்மு ஜாக்சனைச் சந்திக்கப் புறப்படுகிறார். உடன் சுந்தரலிங்கமும், ஊமைத்துரையும் பாதுகாப்புக்குச் செல்கிறார்கள். பேட்டிக்கு வரச் சொன்ன ஜாக்சன், சுமார் 23 நாட்கள் 400 மைல்கள் அவர்களை அலையவிட்டு அவமானப்படுத்திக் கடைசியில் 10.9.1798 – அன்று மாலையில் சந்திக்கிறான். கட்டபொம்மனை நிற்க வைத்தே பல மணிநேரம் பேசி, அவரை மேலும் அவமானப்படுத்துகிறான். டர்ரென்று நாற்காலியை ஸ்டைலாக இழுத்துப் போட்டு சிவாஜி கணேசன் உட்காருவார். சிவாஜிதான் அமர்ந்தார். நிஜக் கட்டபொம்மு நின்றுகொண்டிருந்தார். தன்னைக் கைது செய்யும் சூழல் உருவாவதை கட்டபொம்மு உணர்கிறார். தண்ணீர் குடித்துவிட்டு வருவதாகக் கீழே வருகிறார். ஆங்கிலச் சிப்பாய்கள் அவரை மடியைப் பிடித்து இழுக்கிறார்கள். சில சிப்பாய்கள் கட்டபொம்மனையும், ஊமைத் துரையையும் நோக்கிச் சுடுகிறார்கள். கோட்டைக்கு வெளியே நின்றிருந்த சுந்தரலிங்கம், தன் வீரர்களுடன் கட்டபொம்மனைப் பாதுகாக்க வருகிறார். அப்போது ராணுவத் துணைத் தளபதி கிளார்க், கட்டபொம்மனைக் கொல்ல பாய்ந்து வருவதைக் கண்ட சுந்தரலிங்கம், தன் வாளால் அவனை வெட்டிச் சாய்த்தார்.

கட்டபொம்மு அப்போது தப்பித்தது, சுந்தரலிங்கத் தேவேந்திரரால்தான். ஓரளவு அமைதி திரும்பும் சூழ்நிலையில், எட்டையபுர நாயக்கர் கட்டபொம்மு மீது, கும்பனிக்குப் புகார்க் கடிதம் அனுப்புகிறார். கட்டபொம்முவுக்கும், எட்டப்ப நாயக்கருக்கும் முன்னரே இருந்த எல்லைத் தகராறும், எட்டப்பரின் கும்பனி விசுவாசமும் இப்படிப்பட்ட பல புகார்களைக் கொடுக்க வைத்தன. அதே காலத்தில் ஊத்துமலை பாளையக்காரர், சிவகிரிப் பாளையக்காரர் முதலான பலரும், கட்டபொம்மனின் மேல் கும்பனிக்குப் புகார் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். மற்றொரு பாளையத்தில் பிரவேசிப்பது, அழிம்பு செய்வது, பயிர்களை நாசமாக்குவது அல்லது களவாடுவது, மாடு பிடிப்பது போன்ற சின்னச் சின்ன வரம்பு மீறுதலை எல்லோருமே எல்லா பாளையக்காரர்களுமே செய்தவர்கள்தான். கட்டபொம்முவும் செய்தார். எரிச்சலடைந்த கும்பனி ஆட்சி, பாஞ்சாலங்குறிச்சியின் மேல் படையெடுத்தது.

இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றை எழுதியவர்களில், சுந்தரலிங்கத் தேவேந்திரரின் பங்களிப்பைத் தனியாகப் பிரித்து எழுதி, அவருக்குரிய மரியாதையை ஏற்படுத்திய வரலாற்று ஆசிரியர் தமிழவேள் அவர்களைப் பாராட்ட வேண்டும். ‘பாஞ்சாலங்குறிச்சி படைத் தளபதி சுந்தரலிங்கத் தேவேந்திரர்’ என்னும் பெயர் கொண்ட அவரது ஆய்வு நூல், மிகுந்த முக்கியத்துவம் உடையது. இந்த நூல் மூலம் பல மறைக்கப்பட்ட செய்திகள் வெளியாகி உள்ளன. அவைகளில் முக்கியமான ஒன்று, பாஞ்சாலங்குறிச்சிப் போரில், கட்டபொம்மனின் தோளுடன் தோளாக நின்று, கடைசிவரை அவருடன் சேர்ந்து போராடித் தம் உயிரைத் தந்தவர்கள் தேவேந்திரர்களும் பகடைகளுமே ஆவர். காலாடிகளையும், பகடைகளையும் தம் பிள்ளைகள் போலக் கருதிக் கட்டபொம்மு வளர்த்தான் என்கிற முக்கியச் செய்தியைத் தமிழவேள் பல ஆதாரங்கள் மூலம் தந்துள்ளனர். இந்தக் கட்டுரையில் பல முடிவுகளை அந் நூலில் இருந்தே நான் எடுத்துக் கொண்டேன்.

5.9.1799 -ம் தேதி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகை இடப்பட்டு அன்றே தாக்கப்பட்டது. சுந்தரலிங்கத் தேவேந்திரர் தலைமையில் காலாடிக் கருப்பத் தேவேந்திரர், வீரமல்லு நாயக்கர், கந்தன் பகடை, பொட்டிப் பகடை முதலான துணைத் தளபதிகளின் வழிகாட்டுதலில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கும்பனிப்படை வீரர்களுடன் மோதினார்கள். மிகவும் உக்கிரமாக நடைபெற்ற முதல் நாள் போரில் ஐந்து முக்கிய ஆங்கிலத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். ஆங்கிலப் பகுதிக்குப் பெரும் சேதம் விளைந்தது.

மறுநாள் 6-ம் தேதி இரவு கட்டபொம்மன், தன் தம்பி ஊமைத்துரையோடு கோட்டையைவிட்டு வெளியேறி, படை திரட்டும் பொருட்டுக் கோலார்பட்டிக்குச் செல்கிறார். மறுநாள் கோட்டை இடித்துத் தள்ளப்படுகிறது. அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.

மன்னர்கள் காலத்திலே இருந்து பாளையக்காரர்கள் வரை, ஆங்கிலேயர்கள் மற்றும் ஆதிக்கச் சக்திகளிடம் தோற்றமைக்குக் காரணம், தமிழ்நாட்டு வீரர்கள் அவர்கள் தமிழர்களோ, கம்பளத்தார்களோ யாராக இருந்தாலும் ஒழுங்கான படைப் பயிற்சியும் போதுமான ஆயுதங்கள் இல்லாமையும், ஆயுதங்கள் நவீனமானதாய் இல்லாமையும், எல்லாவற்றுக்கும் மேலே துரோகத்தாலும் வீழ்ந்தார்கள். ஆயிரக்கணக்கான தேவேந்திரர்கள், அதே அளவு அருந்ததியர்களின் வீரத்தில் பழுதில்லை. தாய் பூமிப் பற்று மற்றும் விசுவாசம் அல்லாமல் வேறு எதுவும் அவர்களிடம் இல்லை.

கோலார்பட்டியில் இருந்து கொண்டு படைதிரட்டிக் கொண்டிருந்த கட்ட பொம்மனையும் ஊமைத் துரையையும் எட்டயபுரம் படையும், ஆங்கிலேயர் படையும் சுற்றிக்கொண்டது. கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தப்பித்து வெளியேறினர். தாளாபதிப்பிள்ளை கைது செய்யப்படுகிறார். சுந்தரலிங்கம் தலைமறைவாகிறார்.

கட்டபொம்மனைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. தமிழவேள் மிகுந்த ஆவண ஆதாரங்களுடன் இக்குறிப்புகளை எழுதுகிறார். ஒற்றர்கள் மூலம் கட்டபொம்முவும், ஊமைத்துரையும் புதுக்கோட்டையில் சந்திப்பதாகத் தகவல் அறிந்த பாளர்மேன், புதுக்கோட்டை தொண்டைமானுக்குத் தகவல் அனுப்பி, கட்டபொம்மன் குழுவினரைக் கைதுசெய்ய உதவும்படிக் கேட்டுக்கொள்கிறான். சிவகங்கை வட்டத்தைச் சேர்ந்த திருக்களம்பூர் அருகில் கலியபுரம் எனும் இடத்தில் 23.9.1799 அன்று தொண்டைமான் ஆட்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை, மைத்துனர்கள் இருவர் மற்றும் மூன்று பேருடன், ஆக ஏழுபேரைக் கைது செய்கிறார்கள். 5.10.1799 அன்று அவர்கள் கயத்தாறு கொண்டுவரப்பட்டு 16.10.1799 வரை சிறையில் வைக்கப்படுகிறார்கள். 16.10.1799 அன்று காலை கட்டபொம்மு மீது விசாரணை நடத்தப்படுகிறது. தீர்ப்பை எழுதிவைத்துக்கொண்டு, விசாரணையைத் தொடங்குகிறார் பாளர்மேன். ஐந்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். ‘ஏதேனும் கூற விரும்புகிறாயா?’ என்று கட்டபொம்மனிடம் கேட்கிறான் அவன். பாளர்மேனை அலட்சியப்படுத்துகிறார் கட்டபொம்மன். வேடிக்கை பார்க்க வந்த கும்பனி விசுவாசிகளான எட்டயபுரம், சிவகிரிப் பாளையக்காரர்களை மிக ஏளனத்துடன் பார்க்கிறார். தூக்குமேடைக்கு மிகுந்த வீரத்துடன் நடந்து செல்கிறார் கட்டபொம்மன். கயத்தாறு பழைய கோட்டைக்கு எதிரே உள்ள புளிய மரத்தில், கட்டபொம்மன் தன் உயிரைச் சுதந்திரத்துக்கு விலையாகக் கொடுத்தார்.

பாஞ்சாலங்குறிச்சி போரின் அடுத்தகட்டம், ஊமைத்துரையோடு ஆரம்பமாகிறது. உண்மையில் இந்தக் காலகட்டத்தில் கதாநாயகன் சுந்தரலிங்கத் தேவேந்திரன்தான். பாளையங்கோட்டைச் சிறையில் அகப்பட்டு, தூக்குக்குக் காத்திருந்த ஊமைத்துரையையும் மற்றும் உள்ள பாஞ்சை வீரர்களையும் மிகப் பெரிய சாகசம் செய்து தப்பிக்கச் செய்தவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். அந்த வீரம் செறிந்த வரலாற்றை அடுத்துக் காண்போம்.

-சரித்திரம் தொடர்கிறது

பிரபஞ்சன்